யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் தொழிற்சந்தை ஒன்றினை நடாத்தினர்.
யாழ்.மாவட்ட மேலதிக செயலர் பிரதீபன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலர் மகேசனால் இந்த தொழிற்சந்தை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.தொழில் திணைக்களத்தின் உதவிச்செயலாளர் சஞ்சீபன் ,மாவட்ட இணைப்பாளர் கருணாகரன்,மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,தொழில் வழங்கும் தொழில் தரகர்கள்,தொழில் பெறுவதற்க்காக வந்த இளைஞர்கள் ,யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments