Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கத்தின் நடமாடும் சேவையால் பலர் பயன் ; நாளையும் சேவை நடைபெறும்


வடக்கு மாகாணசபை மற்றும்  மத்திய போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் வட மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடத்தும் "வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக பயணிப்போம்" எனின் தொனிப்பொருளில் நடமாடும் சேவை இன்றைய தினம் சனிக்கிழமை  ஆரம்பமானது.

கைதடியிலுள்ள வடக்கு மாகாணசபை வளாகத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பித்த நடமாடும் சேவை மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் நாளை ஞாயிற்றுக்கிழமையும் (23) இடம்பெறவுள்ளது. 

ஆரம்ப நிகழ்வில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிசாந்த அனிருத்த வீரசிங்க , மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் , வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த நடமாடும் சேவையின் ஊடாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கையும் இலகுவாக ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என வட மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.









No comments