Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விபத்தில் தாயும் மகனும் உயிரிழப்பு ; தந்தையும் மற்றுமொரு மகனும் படுகாயம்!


முச்சக்கர வண்டி மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும், மகனும் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையும் மற்றொரு மகனும் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் 42 வயதுடை தாய் மற்றும் அவரது 18 வயதுடைய மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments