வவுனியா நெடுங்கேணி பகுதியில் யுவதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் இன்றைய செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (வயது 21) எனும் யுவதியை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி வீட்டின் வெளி வளாகத்தில் நின்ற வேளை துப்பாக்கி தாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments