Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். பேருந்துகளில் அலைபேசி திருடிய குற்றத்தில் இளைஞன் கைது ; திருட்டு கொடுத்தவர்கள் தமது அலைபேசியை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை


யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரையே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை  திருடப்பட்டு வந்த நிலையில் அவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். 

அலைபேசிகளை தவறவிட்டவர்கள், பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள்,  அலைபேசியை அடையாளம் காட்டுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கோரியுள்ளனர். 

No comments