Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இளவாலையில் பொலிஸார் என கூறி வீட்டினுள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளை!


யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் பொலிஸார் என கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் வீட்டில் இருந்த மூதாட்டியின் ஒரு பவுண்  தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

குறித்த மூதாட்டியின் கணவர் , பிள்ளைகள் வெளியில் சென்ற சமயம் மூதாட்டி மாத்திரம் வீட்டில் இருந்துள்ளார். அந்நேரம் தம்மை பொலிஸார் என கூறி வீட்டினுள் நுழைந்த மூவரடங்கிய குழு ஒன்று மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து , அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மூவரடங்கிய கொள்ளை கும்பல் தொடர்பில் சிசிரிவி பதிவுகள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் , அதன் ஊடாக கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அதன் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments