யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் ஆகியன மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அப்பகுதியை சேர்ந்த சகாயதாசன் பவா (வயது 35) என்பவரே சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
பட்டா ரக வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments