Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊர்காவற்துறையில் இருந்து யாழ்.போதனாவிற்கு நோயாளியை ஏற்றி வந்த நோயாளர் காவு வண்டிக்கு காற்று போனது!



உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்பட்ட நோயாளர் காவு வண்டியில் மேலதிக சிகிச்சைக்காக நேயாளியை ஏற்றி வந்த நிலையில் நோயாளர் காவு வண்டி நடு வீதியில் காற்று போய் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த சம்பவத்தினை செய்தியாக்கும் நோக்குடன் நோயாளர் காவு வண்டி வீதியில் காற்று போய் நிற்பதனை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளரை , நோயாளர் காவு வண்டி சாரதி மற்றும் நோயாளர் காவு வண்டியில் வந்திருந்த வைத்தியர் என்பவர்கள் மிரட்டி, தாக்க முற்பட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் பயணித்த நோயாளர் வண்டி மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் திடீரென காற்று போய் வீதியில் நின்றுள்ளது. 

அவ்வேளை குறித்த வீதி ஊடாக பயணித்த ஊடகவியலாளர் நோயாளர் வண்டி காற்று போன நிலையில் வீதியில் நோயாளருடன் நிற்பதனை அவதானித்து அதனை செய்தியாக்கும் எண்ணத்துடன் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே ஊடகவியலாளர் மிரட்டப்பட்டுள்ளார். 

குறித்த நோயாளர் காவு வண்டியின் சில்லுகள் டயர்கள் தேய்வடைந்த நிலையில் காணப்படுவதனாலையே வீதியில் காற்று போவதற்கு காரணமாக இருந்ததாகவும் , அதனை தான் செய்தி ஊடாக வெளிக்கொணர்ந்தால் நோயாளர் காவு வண்டி உரிய பராமரிப்பு இன்றி காணப்படும் விடயம் வெளி வரும் என்பதனாலையே தன்னை சாரதியும் , வைத்தியரும் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். 

No comments