Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நவாலியில் பெண்ணுடன் தவறான உறவை பேணியவர் , அப்பெண்ணின் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் கைது!


குடும்ப பெண்ணொருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபர் , அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவாலி கல்லுண்டாய் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருடன் 41 வயதான நபர் ஒருவர் தவறான உறவினை பேணி வந்துள்ளார் எனவும், அந்நிலையில் அப்பெண்ணின் 13 வயதான சிறுமியையும் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் உள்ளாகி என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. 

அது தொடர்பில் அறிந்த , அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , மானிப்பாய் பொலிஸாரினால் இன்றைய தினம் புதன்கிழமை சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த குற்றத்தில் அந்நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர். 

No comments