Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் அகழ்ந்தவர்கள் அச்சுவேலி பொலிஸாரால் கைது!


சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மூன்று டிப்பர் மற்றும் ஒரு பெக்கோ இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அகழ்வில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்ததுடன் , அவர்களின் வாகனங்களையும் கைப்பற்றினர். 

கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் , கைது செய்யப்பட்ட மூவரையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். 

No comments