Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் மின்சாதன விற்பனையாளர்கள் போன்று நடமாடி போதை மாத்திரை விற்பனை செய்தவர்களுக்கு இரண்டு மாத சிறை!


மின்சாதன விற்பனையாளர்கள் போன்று நடமாடி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கும் யாழ்.நீதவான் நீதிமன்று இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  மோட்டார் சைக்கிளில் மின் குமிழ்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை விற்பனை செய்பவர்கள் போன்று நடமாடி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட வேளை , இருவரும் தம் மீதான குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவருக்கும் இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

No comments