Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!


வடக்கு,  வடகிழக்கு திசை நோக்கி எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் நடுத்தர அளவிலான புயல் வீசுவதற்கான வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் தெரிவிக்கையில், 

மத்திய வங்காள விரிகுடாவில் முல்லைத்தீவுக்கு கிழக்காக 1100 கி.மீ. தூரத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியானது நாளை மறுதினம் வியாழக்கிழமை அளவில் தாழமுக்கமாக மாறும் வாய்ப்புள்ளது. 

இது மேலும் விருத்தியடைந்து எதிருவரும் 22ஆம் , 23ஆம் திகதி அளவில் நடுத்தர அளவிலான புயலாக மாறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. 

இது புயலாக மாறினால் வடக்கு, வடகிழக்கு திசை நோக்கியே ( இந்தியாவின் ஒடிசா அல்லது மேற்கு வங்கம்) நகரும் வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

அத்தோடு வெப்பச் சலன செயற்பாடும் காணப்படுகிறது. எனவே கடுமையான இடிமின்னல் நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு.  

குறிப்பாக நாளை புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

No comments