Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் திருட்டு சந்தேகநபர் 35 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளுடன் கைது!


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் , திருட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 35 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொற்றவற்றை பகுதியில் கடந்த 21ஆம் திகதி பகல் வேளை , வீட்டில் எவரும் இல்லாத போது ,வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் , வீட்டில் இருந்த நகைகளை களவாடி சென்று இருந்தனர். 

சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , திருட்டு நகைகள் என சந்தேகிக்கப்படும் 35 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments