யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வவுனியாவில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments