Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மனைவியுடன் இரகசிய உறவை பேணி இரவுக்கு வீட்டுக்கு வந்த இளைஞனை படுகொலை செய்த கணவன்


தனது மனைவியுடன் இரகசிய உறவை பேணி , இரவு வீட்டுக்கு வந்த இளைஞனை கணவன் தாக்கி மரத்தில் கட்டி வைத்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். 

குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் 37 வயதான நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

இரத்தினபுரி இதெல்லன பகுதியில் வசிக்கும் குடும்ப பெண்ணொருவருடன் உயிரிழந்த இளைஞனுக்கு இரகசிய தொடர்பு காணப்பட்டுள்ளது. 

அந்நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த பெண்ணை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்ற போது, பெண்ணின் கணவரிடம் அகப்பட்டுள்ளார். 

கணவன் இளைஞன் மீது ஆத்திரத்தில் தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் நின்ற மரம் ஒன்றில் கட்டி வைத்துள்ளார். 

அது தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று இளைஞனை மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்த போது , இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

அதனை அடுத்து , இளைஞனை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில், இளைஞன் தொடர்பை பேணிய பெண்ணின் கணவனான 37 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

No comments