புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளதாக உயர் மட்ட தகவல்கள் ஊடாக தெரியவருகிறது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதன் பொறுப்புகளை வைத்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை அலி சப்ரிக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கமை ஜனாதிபதி பொறுப்பில் உள்ள நிதி அமைச்சு பதவியை அலி சப்ரிக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தற்பொழுது வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி செயற்படுகின்றமை குறிப்பிடதக்கது.
No comments