Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் சட்டவிரோதமாக தமிழகம் சென்றுள்ளனர்!


இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 பேர் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அனுஷ்யா அவர்களது  மூன்று மாத குழந்தை, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி அவர்களது இரு மகள்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன்  ஆகிய 10 பேரும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மன்னாரில் இருந்து ஒரு படகில் புறப்பட்டு இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தனுஷ் கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டில் இறக்கி விடப்பட்டுள்ளனர். 

இவர்கள் மூன்று மாத கைக்குழந்தையுடன் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு மத்தியில் படகில் உயிரை பணயம் வைத்து தமிழகத்திற்கு சென்றுள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்றைய தினம் சனிக்கிழமை வரையில் இலங்கையில் இருந்து 198 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments