யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து வவுனியாவில் விபத்துக்கு உள்ளானதில் , யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவி ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நாவலம்பிட்டியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான ராமகிருஷ்ணன் அஜாகரி (வயது 23), சாரதியான உடுப்பிட்டியை சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32) பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த 16 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நான்கு பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் அதிகாலை தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதன் போது பின்னால் வந்த மற்றுமொரு பேருந்து விபத்தினை தவிர்க்கும் முகமாக அதன் சாரதி, பேருந்தை வீதியை விட்டு இறங்கியதில் குறித்த பேருந்தும் விபத்துக்கு உள்ளானது.
விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments