Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு!


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை காலை நடைபெற்றது. 

இதன்போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொறுப்புகள்,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரியின் கடமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன், யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன்,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், பொலிஸார், யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







No comments