Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பாடசாலையில் மாணவர்களுக்கு இடையில் மோதல் ; மாணவன் உயிரிழப்பு


அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பிலுவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் , தரம் 08இல் கல்வி கற்கும் , சிவபாலன் கிரிஷாந் (வயது 13) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான்.

பாடசாலையில் ஒரே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிவடையும் நேரம் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பு ஏற்பட்டது. 

அதன் போது , ஒரு மாணவன் தள்ளி விட மற்றைய மாணவன் மேசைகளுக்கு இடையில் தரையில் விழுந்து மயங்கியுள்ளான். 

உடனடியாக மாணவனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் மாணவன் உயிரிழந்துள்ளான். 

அதேவேளை உயிரிழந்த மாணவனுடன் , தர்க்கத்தில் ஈடுபட்ட மாணவனும் , வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments