ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களின் கண்காட்சியும் விற்பனையும் எங்கட புத்தகங்கள் அமைப்பால், பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் எதிர்வரும் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்து எழுத்தாளர்களின் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வடமராட்சிப் பிரதேச நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சிக்கு வருகைதந்து பயன்பெறவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் தமக்கு தேவையான புத்தகங்களை தெரிவுசெய்து கொள்வனவு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு.
ஆகவே வடமராட்சி பிரதேச பாடசாலைகள் நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் கண்காட்சி தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்து , அனைவரும் பயன்பெற உதவுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
No comments