Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். அயல்வீட்டு என்னை வாளினை காட்டி மிரட்டியதாக கல்வியற்கல்லூரி மாணவன் மீது குற்றச்சாட்டு!


கல்வியற்கல்லூரி மாணவன் ஒருவன் அயல் வீட்டில் வசிக்கும் வயோதிப பெண்ணை வாளை காட்டி மிரட்டியதாகவும் , அப்பெண்ணின் வீட்டின் வாசல் கதவினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளதாக , மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

அப்பகுதியில் உள்ள இரு குடும்பங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நிலையில் இரவு ஒரு குடும்பத்தை சேர்ந்தவரும் , கல்வியற்கல்லூரி மாணவனுமான இளைஞன் வாளினை எடுத்து சென்று தமது குடும்பத்துடன் முரண்பட்ட வயோதிப பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணை மிரட்டியதுடன் , வீட்டின் வாசல் கதவினையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர். 


No comments