Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, June 21

Pages

Breaking News

கனகராஜன்குளத்தில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு!


கனகராஜன் குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மாங்குளம் நகரில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் சாள்ஸ் வினோத் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணி முடித்து மோட்டார் சைக்கிளில் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த வானும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கனகராஜன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.