யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி திறக்கப்பட்டது.
பின்னர், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதன் செயல்பாடுகளை இடைநிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பமாகும் என தெரிவித்தார்.
No comments