மின் துண்டிப்பு நேரத்தினை பயன்படுத்தி 15 வயது சிறுமியான காதலியுடன் உல்லாசம் அனுபவித்த காதலன் , காதலியின் பெற்றோரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் கல்கிரியாகம பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அப்பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி, கையடக்க தொலைபேசி ஊடாக அறிமுகமாகிய இளைஞனுடன் காதல் உறவை பேணி வந்துள்ளார்.
இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்களை சாதகமாக பயன்படுத்தி சிறுமியின் வீட்டினுள் புகுந்து , சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 09 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளை சிறுமியின் அறைக்குள் சென்று பதுங்கி உல்லாசம் அனுபவித்துள்ளார். 10.30 மணியளவில் மீள மின்சாரம் வந்த போது கட்டிலின் கீழ் பதுங்கியுள்ளார்.
மீளவும் இரவு சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதிகாலை வேலை சிறுமியின் தந்தை தண்ணீர் குடிக்க தனது அறையில் இருந்து வெளியே வந்த போது , சிறுமியின் அறைக்குள் பேச்சு சத்தம் கேட்பதனை அவதானித்து கதவினை திறந்து பார்த்த போது , சிறுமியுடன் இளைஞன் ஒன்றாக கட்டிலில் காணப்பட்டுள்ளார்.
அதனை கண்ணுற்று தப்பியோட முனைந்த இளைஞனை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் இளைஞனை ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments