Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

37 இலட்ச ரூபாய் மோசடி ; வல்வெட்டித்துறை பெண்கள் இருவர் கைது!


நிதி மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற வழக்கு பொருட்களான உள்ள 70 பவுண் தங்கத்தை விடுவித்து தருவதாக கூறி 36 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாவை தனது கணக்கிற்கு வைப்பிலிட வைத்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபர்களான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் இருவரும் நேற்றைய தினம் புதன்கிழமைகாங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட பெண்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments