யாழ். மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில், யாழ் சாவகச்சேரி நலன்புரி மண்டபத்தில் இடம்பெற்றது.
அதன் போது, வறுமைக்குட்பட்ட போராளிகளுக்கு தைப்பொங்கல் செலவாக முப்பதாயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர், மதகுருமார், ஓய்வு பெற்ற அதிபர் அருந்தவபாலன், வவுனியா மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அரவிந்தன் , கிளிநெளிச்சி மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அலன், போராளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments