Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.போதனா மருத்துவ கழிவுகளை அழிப்பது தொடர்பில் மாநகர சபையுடன் பேச்சு!


யாழ் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

யாழ் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்,  போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்திய மூர்த்தி,  மாநகர சபையின் ஆணையாளர், மாநகர சபையின் பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்

குறிப்பாக வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தற்போது தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அழிக்கப்படுகின்றன. எனினும், யாழ்ப்பாண வைத்திய சாலையானது, யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள அனைவரது வைத்திய தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு வைத்தியசாலை என்பதனால் அதிகளவு மருத்துவ கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படுகின்றன.

எனவே அந்த கழிவுகளை யாழ்ப்பாண மாநகரத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு இடத்தில் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அதனை அழிப்பதற்கு ஒரு இடத்தினை தெரிவு செய்வது தொடர்பில்  ஆராயப்பட்டது.

No comments