Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் தூள் தடவி சித்தரவதை புரிந்த கணவனுக்கு வலை வீச்சு


மதுபோதையில் வீட்டிற்கு சென்றவர் , மனைவியை நிர்வாணம் ஆக்கி உடம்பில் மிளகாய் தூளினை தடவி அட்டையை ஊர விட்ட நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பாதுக்க பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் 39 வயதான தாயையே , அவரது கணவர் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மது போதையில் வீட்டுக்கு வந்த நபர் , மனைவியின் ஆடைகளை அவிழ்த்து , கண்களையும், கை கால்களையும் , கட்டி மிளகாய் தூளினை உடம்பு முழுவதும் தடவியுள்ளார். 

அதனால் உடம்பில் ஏற்பட்ட எரிவு தாங்காது மனைவி துடித்த போது , அட்டையை உடலில் ஊர விட்டு சித்திரவதை புரிந்துள்ளார். 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மது போதையில் வரும் கணவன் தனது பிள்ளைகளுக்கு முன்னால் இவ்வாறு தன்னை சித்திரவதை செய்து அதனை இரசிப்பதனால் , பிள்ளைகளும் தானும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

முறைப்பாட்டின் பிராகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments