அகில இலங்கை YMMA இன் 50 ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 1000 தென்னை மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை களுத்துறை முஹியதீன் ஜும்மா மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை YMMA இன் தேசிய தலைவர் திரு, இஹ்ஸான் அஹமட் ஹமீட் அவர்களும், சிறப்பு விருந்தினராக மாவட்ட இயக்குநர் ரமீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
களுத்துறை YMMA உறுப்பினர்கள் மற்றும் திரு ,முப்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
களுத்துறை YMMA இன் முன்னாள் பேற்றன் அல்ஹாஜ் மர்ஹும் சப்ரி (பொறியியலாளர்) அவரை நினைவு கூறும் விதமாக ஒரு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி :- அப்ரா அன்சார் (களுத்துறை)
No comments