Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கடன் மறுசீரமைப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் !


கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தமது திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது கடன் பேச்சுவார்த்தையை விரைவில் முடிப்பதற்கான வழிகள் குறித்தும் ஆலோசித்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது உலக வங்கி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments