Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கிளிநொச்சியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு


கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் மகனின் தாக்குதலுக்கு  இலக்கான  தந்தை உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து இராமசாமி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் வசித்து வந்த தந்தை, தாய் மகனுக்கு இடையில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைகலப்பு ஏற்பட்டதாகவும். அதன் போது மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தாயாரும், படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  உயிரிழந்த தந்தையின் சடலம்  உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. 

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments