Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்


நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மன்னார் சிலாவத்துறை கொண்டச்சி சிங்கள விஜய கம்மான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

பாதுகாப்பான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கடுமையான சட்ட நிபந்தனைகளை க் கொண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் தடைச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது. 

கடந்த 4 ஆண்டுகளில் ஈஸ்டர் தாக்குதல், தொற்று நோய், நிலைமைகள் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில், எட்டு மாத குறுகிய காலத்தில், நாடு அனைத்து வழிகளிலும் முன்னேறியுள்ளது. பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்ததை விடவும் முன்னேற்றம் உள்ளது என்றார். 

No comments