நள்ளிரவு வேளைகளில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வீடுகளுக்குள் புகுந்து களவுகளில் ஈடுப்பட்டு வரும் நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து உள்ளனர்.
களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடுகளில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டன. அவை தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வீடுகளில் , வீதிகளில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி கமராக்களின் காணொளிகளை சோதனையிட்ட போது நபர் ஒருவர் ஆடைகள் இன்றி நிர்வாணமாக வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
காணொளிகள் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் கண்டு கொண்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments