அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு கேமா அறக்கட்டளை மற்றும் tamilnews1 இணையத்தளம் ஆகியவை இணைந்து, காங்கேசன்துறை நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்காக ஆரம்பித்துள்ள, கற்றல் திறன் விருத்தி போட்டியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தரம் 1 மாணவர்களுக்கான ஓவியப் போட்டியினை பாடசாலை வகுப்பறையில் நடாத்தியிருந்தது.
மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தில் காங்கேசன்துறை சக்தி பல்பொருள் வாணிபம் இணைந்து கொண்டு தமது பங்களிப்பாக ஓவியப்போட்டிக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பதாக தெரிவித்ததோடு, குறித்த கற்றல் உபகரணங்களை சக்தி பல்பொருள் வாணிப உரிமையாளர் நிதர்ஷி கலந்துகொண்டு மாணவர்களிடம் கையளித்தார்.
மீள்குடியேற்ற பகுதியான காங்கேசன்துறை பிரதேசத்தில் உள்ள இப்பாடசாலையானது குறைந்தளவு மாணவர்களை கொண்டுள்ளதோடு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களே அதிகளவில் கல்வி கற்கின்றனர். அதுமட்டுமன்றி மாணவர்களது வரவும் குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments