விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உட்பட 4 பேர் 17 நாட்களுக்கு பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கொலம்பிய அமேசான் காட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதன் போது , விமானத்தில் பயணித்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர்.
இவர்களை, அமேசான் காட்டிற்குள் தேட, 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்றுள்ளனர்.
தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை மற்றும் 3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
No comments