Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு விளைவிக்க கூடாது என மல்லாகம் நீதிமன்று கட்டளை!


தையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ , விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது. என மல்லாகம் நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.

பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் குறிப்பிட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது. 

ஒவ்வொருவரும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும். விகாரையின் முகப்பிலையோ , பாதையிலையோ தடைகளை ஏற்படுத்த கூடாது. விகாரை வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ , விகாரையில் நடைபெறும் உற்சவங்களுக்கோ , இடையூரு ஏற்படுத்த கூடாது என நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது. 

அதேவேளை திறந்தவர்களது உரித்து ஏதேனும் பாதிக்கப்பட்டு இருப்பின் , உரிய நீதிமன்றில் உரிய வழக்கொன்றை தாக்கல் செய்து , உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மன்று அறிவுறுத்தியுள்ளது. 

அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று திகதியிட்டு உள்ளது. 

No comments