தேசிய சுற்றாடல் வாரத்துடன் இணைந்ததாக யூன் மாதம் 12 ஆம் திகதி முதல் யூன் மாதம் 18 ஆம் திகதிவரை பாடசாலைகளில் சுற்றாடல் தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் அளவெட்டி அருணாசல வித்தியாலயத்தில் மாணவர் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வை வலிகாமம் கல்வி வலய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகரும், சுற்றாடல் முன்னோடி கோட்ட ஆணையாளருமான க.சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.
இதன் போது மாணவர் பேண்தகு நிலையில் சுற்றாடலைப் பேணும் உத்திகளை மாணவருக்கு எடுத்துக் காட்டியுமிருந்தார்.
No comments