பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி வழங்கும் விசேட கூட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில், அதன் முதல் பகுதி கூட்டமாக குறித்த கூட்டம் அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
அதன் போது, அதானி குடும்பத்தின் முதலீட்டில் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு மாவட்ட அபிவிருத்தி குழு அனுமதி வழங்க மறுத்தது.
இரண்டு கூட்டங்களில் குறித்த நிலையத்தின் நன்மை தீமைகள் மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்ட பின்னர் அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
No comments