Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

”செய்தியாளா் - ஊடக துாதுமடல் சஞ்சிகை வெளியீடு!



”செய்தியாளா் - ஊடக துாதுமடல்” என்ற ஊடகத்துறை சாா்ந்த சஞ்சிகை அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரால் நேற்றைய தினம் சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. 

யாழ். பெரிய தோட்டம் கடற்கரை வீதியில் உள்ள பிசப் சவுந்தரம் மீடியா சென்ரலில் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் விரிவுரையாளா் கிருத்திகா தா்மராஜா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியா் சி.ரகுராமும், சிறப்பு விருந்தினராக வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியா் ந.விஜயசுந்தரமும் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோர்  கலந்துகொண்டாா்கள். 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செபஸ்தியாம்பிள்ளை மைக்கல் தாசன் ஆசியுரை வழங்கியதுடன் முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டாா். 

அதேவேளை இந்நிகழ்வில் பேராசிரியா் ரகுராமுக்கு ஊடக விருதும் வழங்கப்பட்டது.  ஊடகவியலாளராகவிருந்து கலைப் பீடாதிபதியாக உயா்ந்துள்ள ரகுராம் கௌரவிக்கப்பட்டாா். 

ஊடகத்துறைக்காக என யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்கனவே 1980 களில் பத்திரிகையாளன் என்ற பெயரில் சஞ்சிகை ஒன்று வெளிவந்திருந்தது. வட இலங்கை பத்திரிகையாளா் சங்கத்தினால் இந்த சஞ்சிகை வெளியிடப்பட்டது என்ற தகவலும் “ஊடக துாதுமடல்” தந்துள்ளது. அது குறித்த கட்டுரை ஒன்றும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

இதனைவிட மூத்த ஊடகவியலாளா் ராதேயன் குறித்த ஒரு விரிவான கட்டுரை உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவிலாளா்கள் குறித்தும், ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பலவும் இதில் இடம்பெற்றுள்ளன. 

இலங்கையில் - குறிப்பாக தமிழ் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்துகொள்வதில் ஆா்வம் உள்ளவா்களுக்கு பயனுள்ள தகவல்களைத் தரும் ஒரு சஞ்சிகையாக இந்த மாதம் முதல் மாதாமாதம் இது வெளிவரும் என்று அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை தெரிவிக்கின்றாா். 

 நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளா் தினேஷ், மூத்த ஊடகவியலாளா் எஸ்.தில்லைநாதன், பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவா்கள் உட்பட பலரும் கலந்துகொண்டாா்கள்.







No comments