Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உணவு நஞ்சானதால் பெண் உயிரிழப்பு ; மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த உயேந்தினி (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்து பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை  மதிய உணவினை உண்ட பின்னர் சுமார் 2 மணி அளவில் உயிரிழந்த பெண் மற்றும் அவரது 4 மற்றும் 7 வயது இரு குழந்தைகள் அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த நிலையில் மயங்கியதை அடுத்து அவர்களை கஞவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 வரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments