Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 20

Pages

Breaking News

நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழப்பு


இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு  கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

 கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது.

அதில் ,709 பேர் உயிரிழந்துள்ளனர்.  667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர். ஏனையவர்கள் வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் , 102 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளதாகவும். வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை எனவும் தெரியவந்துள்ளது.

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவவுனியாவில் மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடு

ஓமந்தையில் இந்திய துணைத்தூதராக அதிகாரியின் கார் விபத்து - உய...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது

கெஹெலியவின் மகள் வெளியே வந்தார்

யாழ் . மாவட்ட பதில் செயலராக கடமையாற்றிய பிரதீபனுக்கு நிரந்தர...

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் ...

வடமாகாண பாடசாலை உணவுத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந...

பின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூட...

கிழக்கில் அதிகரித்துள்ள கடற்கொள்ளை - கட்டுப்படுத்த உடனடி நடவ...