Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சக கடற்தொழிலாளரை பகிடிவதைக்கு உட்படுத்திய 7 கடற்தொழிலாளர்கள் கைது


பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடி படகில், முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் 7 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக குறித்த மீன்பிடி படகு சென்றிருந்தபோது, குறித்த இளைஞரை கடலில் தள்ளிவிட்டு, சக தொழிலாளர்கள் அவரை துன்புறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, பேருவளை – அம்பேபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த 7 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments