ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் இடையில் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிவடைந்துள்ளது.
வவுனியா கல்மடு ஈஸ்வரபுரம் பகுதியில் நண்பர்கள் இருவர், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் ஒருவர் , மற்றையவரை அருகில் இருந்த மண்வெட்டியால் தாக்கியதில் தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வவுனியா கல்மடு ஈஸ்வரபுரத்தை சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஈச்சங்குளம் பொலிஸார் , தாக்குதலாளியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments