Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊடகவியலாளர்களுக்கான இலவச பயணச்சீட்டு


கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவச பிரயாணச் சீட்டு (பஸ் பாஸ்) நடைமுறையை மீண்டும் அமுல்படுத்தி அதை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எவ்வித இலாபங்களுமின்றி சமூக நோக்கை முன்நிறுத்தி தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றவர்கள். அவர்கள் தங்களின் நேரம், காலம், பணம் போன்றவற்றுக்கு மேலாக தனது உயிரையும் தியாகம் செய்து ஊடகப் பணியை தங்கு தடையின்றி மேற்கொண்டு வருபவர்களாக இருக்கின்றனர். அவர்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றிக் கொடுப்பதில் நான் என்றும் முன்னிற்பேன் என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்டு வந்த இலவச போக்குவரத்து பிரயாணச் சீட்டு (பஸ் பாஸ்) நடைமுறையை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை வழங்காமல் இடை நிறுத்தியிருந்தமையும், அதை மீண்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை புதிய ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments