Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 25

Pages

Breaking News

யாழில் சகோதரியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சகோதரன் கைது


சகோதரியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சகோதரனை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தான் வீட்டில் இல்லாத வேளை , வீட்டில் இருந்த தனது நகைகள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பெண்ணின் சகோதரனை சந்தேகத்தில் கைது செய்து , விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது , சகோதரியின் நகைகளை தான் களவாடியதை ஒப்புக்கொண்டவர் , அதனை அடகு வைத்து , 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாகவும் , தெரிவித்துள்ளார். 

அதனை அடுத்து அவரிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொண்ட பொலிஸார் , அடகு வைக்கப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.