இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், 2022 இல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments