ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.
சந்திப்பின் போது, எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலும் , புலம்பெயர்ந்த உறவுகள் எமது மண்ணில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், முதலீடுகளுக்கும் இடையூறாக இருக்கும் விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது
அதேவேளை இவ்விடயம் தொடர்பில் முனைப்புடன் செயற்படுமாறும் தேவை ஏற்படும் போது நேரடியாக தன்னை அனுகுமாறும், ஜனாதிபதி, கருணா அம்மானிடம் தெரிவித்ததாகவும் கருணா அம்மானின் இணைப்புச் செயலாளர் டானியல் கௌதமன் தெரிவித்தார்.
இச் சந்திப்பின் போது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.








No comments