Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். காணி பதிவு அலுவலகத்தில் துரிதசேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்


யாழ்ப்பாண காணி பதிவு அலுவலகத்தில் துரிதசேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காணி பதிவாளர் அறிவித்துள்ளார்.

தமது அலுவலகத்தில் இரு அலுவலக உதவியாளர்கள் மட்டுமே கடமையாற்றி வந்த நிலையில் ஒருவர் மருத்துவ விடுமுறையில் இருப்பதனால், ஒருவர் மட்டுமே கடமையில் இருப்பதனால், துரித சேவைகளை நடத்த முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே மறுஅறிவித்தல் வரையில், துரித சேவைகள் இடம்பெற மாட்டாது. சாதாரண சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவித்துள்ளார்.

No comments