Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 3

Pages

Breaking News

குளவிக்கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு!


நுவரெலியா – பம்பரக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது, நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த நான்கு பேரும் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து 16 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த குறித்த சிறுவன், நுவரெலியா, பம்பரக்கலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.